முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொல்லி அடித்த 'கில்லி' விஜய்க்கு லைஃப் டைம் படம்தான்

கில்லி உண்மையிலே நடிகர் விஜய்க்கு ரொம்பவே முக்கியமான படம். 




அப்பா தயாரிப்பில் நடிக்க தொடங்கிய விஜய்க்கு (1992) பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்த படம் பூவே உனக்காக (1996). அதுவரை குடும்ப ஆடியன்ஸ் என்படும் ஜெனரல் ஆடியன்ஸ் விஜய் பக்கம் திரும்பவில்லை. இந்த படம் விஜய் பக்கம் திரும்ப வைத்தது. அது வரைக்கும் வந்த படங்கள் எல்லாமே விஜயை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்த படமாகவே அமைந்து போனது. அடுத்து காதலுக்கு மரியாதை (1997 ) இன்னும் அடுத்த கட்டம் அவரை நகர்த்தியது.


காதலுக்கு மரியாதை விஜய் ஒரு டிரெண்ட் செட்டராக மாறிப்போனார். கதையும் மாறிபோனது. தொடர்ந்து அப்படியான படங்களே அமைந்து போனது. காதலுக்காக விஜய் என்றே கதைகள் அமைந்து போனது. ஒரு கட்டத்தில் அது மெல்ல தேய தொடங்கியது. ஏராளமான காதல் கதைகள் வந்து குவிந்தன. 


சரி ஆக்ஷன் பிளாக் என பகவதி, யூத், தமிழன் என முயற்சித்தும் செல்ஃப் எடுக்க முடியவில்லை. இந்த நேரத்தில் அவரை மீட்க வந்த படம் தான் திருமலை (2003). கொஞ்சம் ஓவர் ஹீரோயிசம் கொஞ்சம் எமோசனல் என கலந்துகட்டிய படம். விஜய் இனி எந்த பாதையின் போகலாம் என்பதை திர்மானமாக சொல்லியபடமும் .


இந்த சூழலில் தான் ஒக்கடு படம் கில்லியாக விஜயிடம்(2004) செல்கிறது. ஏற்கனவே பரபர என கதை சொல்லும் தரணி டீமிடம் இந்த கதை சிக்கியது. அவர்கள் இன்னும் மெருகேற்ற அதுவரை இருந்த விஜய் மேனரிசத்தையே அந்த படம் மாற்றியது, அதன் பிறகு விஜய் கொஞ்சம் தெளிவானர். கில்லி அவரை 'சூப்பர் ஸ்டார்' இருக்கையை நோக்கி நகர்த்திய படங்களில் ரொம்ப முக்கியமானது. 


சில படங்கள் சில ஹீரோக்களுக்கு லைஃப் டைம் படமாக அமைந்து போகும். விஜய்க்கு அப்டி அமைந்த மூன்றாவது படம் கில்லி. முன்னதாக பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை அமைந்து போனது. இன்னும் சிலருக்கு துள்ளாத மனமும் துள்ளும் சொல்லுவார்கள். என் கணக்கில் அது இல்லை.


அவரோட செட் நடிகர்கள் யாருக்கும் கிடைக்காத ஒரு பெரிய பூஸ்டர் அது. மற்ற நடிகர்களுக்கும் லைஃப் டைம் படம் கிடைச்சது ஆனா லேட்டா கிடைச்சது. ( உடனே பருத்தி வீரன் கார்த்தினு வர வேண்டாம்.. அவரு விஜய்க்கு ஜூனியர் ). 🐐

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...